HybridAnalyzer Tamil

Hot

Wednesday 17 April 2024

சதுப்பு நிலத்தில் மர்மமான கண்டுபிடிப்புகள்

April 17, 2024 0

சதுப்பு நில கண்டுபிடிப்புகள்

சதுப்பு நிலம் என்றாலே சகதியாகவும் மிகவும் நீர் தன்மை உள்ளவைகளாகவுமே இருக்கும். அப்படிபட்ட சதுப்பு நிலமான அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல மர்மமான கண்டுபிடிப்புகளை தான் இந்த காணொளியில் பார்க்க போகின்றோம்

Read More

Sunday 1 January 2023

மிரள வைக்கும் ஆபத்தான விமான தளங்கள்

January 01, 2023 0
         பொதுவாக உலகம் முழுவதும் நிறைய பேர் விமானத்தில் பயணம் செய்ய பயப்படுவதாக ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. அதற்கு முக்கியமான காரணம் கடந்த காலத்தில் நடந்த மோசமான விமான விபத்துகள் தான். ஆனால் இப்போது விமான விபத்து நடப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. எனவே விமானத்தில் செல்ல பயப்பட வேண்டியது இல்லை. ஆனால் அதே விமானத்தில் சில விமான நிலையங்களில் தரையிறங்குவதாக இருந்தால் மட்டும், சற்று பயப்பட வேண்டும். ஏனென்றால் அந்த விமான நிலையங்கள் மிகவும் ஆபத்தான இடமாக உள்ளன. அப்படிப்பட்ட மிகவும் ஆபத்தான விமான தளங்கள் பற்றி தான் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

 
Read More

Sunday 15 May 2022

கடற்கரையில் கரை ஒதுங்கிய வினோதமான பிராணிகள்! 10 Most Strangest Beached Creatures!

May 15, 2022 0

 கடல் நம்மை பல வகையில் ஆச்சரியப்படுத்துகிறது. சில நேரங்களில் கடலில் வாழக்கூடிய பிராணிகள், ஏதோ ஒரு காரணத்தால் கடலை விட்டு வெளியே வந்து கரையில் ஒதுங்கி நிற்கும். இந்த சம்பவம் பல நேரங்களில் நடப்பதாக இருந்தாலும், சில நேரத்தில் பிரம்மாண்டமான திமிங்கலம், வினோதமான மர்ம பிராணிகள் என நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்தும் பிராணிகளும் கூட கரை ஒதுங்குகின்றன. அதுபோல கடற்கரையில் கரை ஒதுங்கிய மிகவும் ஆச்சரியமான பிராணிகளைப் பற்றி தான் இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

Read More

Friday 11 December 2020

விலங்கு வயிற்றில் கிடைத்த 9 வினோத பொருட்கள்!

December 11, 2020 0
                  

பொதுவாக அனைத்து விலங்குகளுக்கும் தனக்கு என்ன உணவு தேவை என்பது நன்றாக தெரியும். எனவே அவை தனக்கான உணவை மட்டும் தான் சாப்பிடும். ஆனால், தவறு செய்யும் பழக்கம் மனிதர்கள் போலவே விலங்குகளுக்கும் உண்டு. எனவே, சில விலங்குகள் சில நேரங்களில் தவறான பொருட்களை தனக்கான உணவு என நினைத்து சாப்பிட்டு பிரச்சனைகளில் சிக்கின்றன. அப்படி பிரச்சனையில் சிக்கிய விலங்குகளின் வயிற்றில் இருந்து கிடைத்த மிகவும் வித்தியாசமான பொருட்களை பற்றி தான் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

Read More

Sunday 6 December 2020

காண்பவர்களை மிரள வைக்கும் 10 வினோதமான அரிய வகை சிலந்திகள்

December 06, 2020 0

பொதுவாக சிலந்திகள் நிறைய பேரை பார்க்கும்போதே பயமுறுத்தும் ஒரு சின்ன உயிரினம். அதில் சில வகை சிலந்தி பயமுறுத்துவது மட்டுமில்லாமல் தனது விஷத்தால் கொலையும் செய்யும். ஆனால் மொத்தமாக உள்ள 43 ஆயிரத்துக்கும் அதிகமான சிலந்தி இனங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தான் இருக்கும்.



சில சிலந்தி சாதாரணமாகவும், இன்னும் சில அரிய இனமாகவும், வேறு சில சிலந்திகளை பற்றி கேட்கும்போது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம். அப்படி ஆச்சரியத்தக்க பண்போடு இருக்கும் சில அரிய வகை சிலந்தி இனங்களைப் பற்றி தான் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.


Read More

Tuesday 21 April 2020

ஊரடங்கால் உலகம் மாறியதை காட்டும் 10 புகைப்படங்கள்! Photos That show Before and After Corona Infection in tamil

April 21, 2020 0

அட இது தான் அந்த இடமா.? என்று முட்ட முட்ட பார்க்கும் அளவுக்கு, லாக்-டவுன் நேரத்தில் மாற்றம் கண்டுள்ளன ஒரு சில முக்கிய இடங்கள். மூச்சு முட்டும் புகை, கால் வைக்க முடியாத அளவுக்கு குப்பை, குடலை பிடுங்கும் நாற்றம் என்று மனிதர்களால் அலங்கோலமாகிய பகுதிகள் எல்லாம், இன்றைக்கு இயற்கை வாசத்தில் மணக்கின்றன. ஒரு பக்கம் லாக்-டவுன் வித்தியாசமான உணர்வை நமக்கு கொடுத்தாலும், இன்னொரு புறம் புது உலகை படைத்துக்கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம். இயற்கை தன்னைத்தானே கட்டமைத்துக்கொள்கிறது என்பதற்கு இதுவல்லவா ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஊரடங்குக்கு முன்பு, பின்பு உலகம் எப்படி மாறியிருக்கிறது என்பதை, அடுத்து வரும் படங்களை பார்த்து வியக்கலாம்.

1. Talawe wetland, மும்பை

before-lock-down lock-down after-lock-down

2. கங்கை நதி, ஹரித்துவார்

before-lock-down lock-down after-lock-down

3. Kruger National Park, South Africa

before-lock-down lock-down after-lock-down

4. Miami கடற்கரை, புளோரிடா

before-lock-down lock-down after-lock-down

5. JJ Flyover, Mumbai

before-lock-down lock-down after-lock-down

6. Llandudno, Wales

before-lock-down lock-down after-lock-down

7. Haridwar சாலை

before-lock-down lock-down after-lock-down

8. Los Angeles, அமெரிக்கா

before-lock-down lock-down after-lock-down

9. Vrishabhavathi ஆறு, பெங்களூரு

before-lock-down lock-down after-lock-down

10. திருமலை, திருப்பதி

before-lock-down lock-down after-lock-down

ஒரு மாத காலத்திற்குள் எத்தனை மாற்றங்கள், இவ்வளவு காலம் தன்னைத்தானே புதுப்பித்து வந்த இயற்கையை எந்த அளவுக்கு மாற்றி வைத்துள்ளோம் என்பதற்கு இவைகளே சாட்சி.

Read More

Sunday 2 February 2020

"கொரோனா வைரஸ் உண்மையில் பயோ வெப்பனா" சர்ச்சையைக் கிளப்பிய ஆமெரிக்க ஆய்வு வெளியீடு!

February 02, 2020 0

சீனாவில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளுக்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே, இந்த வைரஸ் உருவானது குறித்து மிகப்பெரிய விவாதங்களும் எழுந்தன. இதுதொடர்பாக, அமெரிக்காவில் பிரபலமான `ஸீரோ ஹெட்ஜ்' என்கிற வலைதளம் வெளியிட்ட Is This the Man Behind the Global Coronavirus Pandemic என்கிற கட்டுரை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




ஸீரோ ஹெட்ஜ் என்ற வலைதளம் இந்தக் கட்டுரையை கடந்த புதன்கிழமை தன்னுடைய வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, "வைரஸ் பரவுவதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணம், கொரோனா வைரஸின் ஆயுதமாக்கப்பட்ட வெர்சன்தான். சீனாவின் வுஹான் வைராலஜி நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது. உலகின் மிக ஆபத்தான நோய்க்கிருமிகளை இந்த நிறுவனம் ஆராய்ச்சி செய்கிறது. இதுதான் உலக பொதுசுகாதார நிறுவனத்தை அவரசரநிலையை பிரகடனப்படுத்த வழிவகுத்தது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து, கொரோனா வைரஸை பயோ வெப்பனாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்ற சர்ச்சையும் எழுந்தது.

இணையதளம்
வைரஸ் குறித்த அறிவியல் விளக்கங்களை விவரிக்கும் அந்த கட்டுரையின் முடிவில், சீனா மற்றும் உலகம் முழுவதும் உள்ள நாடுகளிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களை பாதித்துள்ள இந்த கொரோனா வைரஸ் உருவான காரணத்தை தெரிந்துகொள்ள வுஹான் வைராலஜி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானியை அணுகுங்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும், அவருடைய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றையும் பதிவிட்டுள்ளனர். ஆனால், வுஹான் ஆய்வகம்தான் இந்த வைரஸை பரப்பியது என்பதற்கான முறையான ஆதாரங்கள் எதுவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்தக் கட்டுரை ஆராய்ச்சியாளர்களிடையே மிகப்பெரிய விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியது. இதுதொடர்பாக வுஹான் வைராலஜி நிறுவனமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸால் வௌவால்கள் ஏன் பாதிப்படைவதில்லை என்பதை விஞ்ஞானி ஜாவ் பெங் ஆய்வு செய்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஜாவ் பெங் கடந்து வந்த பாதை மற்றும் அவரது ஆராய்ச்சி துறைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளனர்.
கல்ஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும் உலக சுகாதார குழுவின் உறுப்பினருமான பிரான்டன் ஜெ. ப்ரௌன் இந்த கட்டுரை தொடர்பாக பேசுகையில், ``வுஹான் நிறுவனம், கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காகவே ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பயோ வெப்பனாக பணிபுரியும் என்கிற சிந்தனையே வேடிக்கையாக உள்ளது. மற்ற வைரஸ் தாக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு மிகக்குறைவு. எனவே, இது பயோ வெப்பன் என்று கூறப்படுவது சரியானதல்ல" என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் ஐ.ஐ.டி டெல்லியில் உள்ள உயிரியல் அறிவியல் பள்ளி மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்திய விஞ்ஞானிகள் குழு ஆகியோர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையின் வரிகளும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்விலும் சில சந்தேகங்கள் தொடர்ந்து இருந்துவருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு
நீக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு

ஸீரோ ஹெட்ஜின் முகநூல் பக்கத்தில் 50,000 மற்றும் ட்விட்டரில் 6,70,000 ஃபாலோயர்கள் உள்ளனர். இந்தக் கட்டுரையை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததும் நெட்டிசன்களிடையே அதிகமான வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஸீரோ ஹெட்ஜின் ட்விட்டர் கணக்கு நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், ``தனிநபரின் விவரங்களைப் பதிவிட்டு ட்விட்டரின் கொள்கைகளை மீறியதற்காக நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுகிறது" என்று அறிவித்துள்ளார்.
Read More

Friday 1 November 2019

2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை சாஸ் பாட்டிலில் கடத்தி வந்த கொள்ளையர்கள், மடக்கிப் பிடித்த ஆஸ்திரேலிய போலீஸ்!

November 01, 2019 0
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திற்கு, அமெரிக்காவிலிருந்து சந்தேகப்படும் படியான ஒரு சரக்கு பெட்டக வந்துள்ளது. அதனுடைய ஆவணங்களை சரிபார்த்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் அதில் ஏதோ குளறுபடி இருப்பதாக சந்தேகித்ததால் அதைக் கொண்டு வந்த நான்கு நபர்களை தனியாக அழைத்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.


சில்லி சாஸ் எனக்கு குறிப்பிடப்பட்டிருந்த அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் சில்லி சாஸ் பாட்டில்கள் தான் இருந்தது. இருந்தாலும் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக அதிலிருந்த சில பாட்டில்களை திறந்து சோதித்தபோது அதில் மெத்திலம் பெட்டமைன் என்கிற போதைப்பொருள் கலந்திருந்தது தெரியவந்தது.

உடனே அந்த நால்வரையும் கைது செய்ததோடு ஒட்டுமொத்த பாட்டில்களையும் சோதனைக்கு உட்படுத்தினார்கள். இதில் 400 கிலோ அளவுள்ள அதே ரக போதை பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு 272 மில்லியன் டாலர்கள். அதாவது, நமது இந்திய மதிப்பில் கூறவேண்டுமானால் சுமார் 1930 கோடியை தாண்டும்.

400 கிலோ என்பது மிகப்பெரிய அளவு என்பதால் இந்த நான்கு நபர்கள் மட்டும் அல்லாமல் இவர்கள் பின்னால் பெரிய கூட்டமே இருக்கும் என ஆஸ்திரேலிய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read More

Monday 28 October 2019

25 வருடங்களுக்கு பிறகு தன் குழந்தைப் பருவ புத்தகத்தை அருங்காட்சியத்தில் கண்டுபிடித்த பெண்!

October 28, 2019 0
ஒருவர் சிறுமியாக இருந்தபோது தன் பெயரை எழுதிய புத்தகத்தை மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ அண்ட்ரோஸ் மற்றும் அவரது சகோதரி ஹெனா, இவர்கள் சிறுமிகளாக இருந்தபோது தி சீக்ரட் கார்டன் என்ற புத்தகத்தை வைத்திருந்தார்கள். அப்போது அவர்கள் அந்த புத்தகத்தில் ஹேனா என எழுதியுள்ளார்கள். பின்னர் அவர்கள் வளர்ந்து விட்டதால் அந்தப் புத்தகத்தை சில ஆண்டுகளில் ஆக்ஸ் ஃபார்ம் சேரிட்டி ஃசாப் என்ற அமைப்பிற்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்கள்.

சமீபத்தில் 35 வயதான ஜோ ஒரு பழைய புத்தக அருங்காட்சியகத்தில் தி சீக்ரட் கார்டன் என்ற பெயர் கொண்ட புத்தகத்தை பார்த்துள்ளார். அந்தப் பெயரைப் பார்த்தவுடன் தன்னுடைய குழந்தைப் பருவம் நினைவிற்கு வரவே அதை திறந்து பார்த்தபோது அவரும் அவருடைய சகோதரி ஹேனாவும் சிறு வயதில் நன்கொடையாக கொடுத்த அதே புத்தகம் தான் அது என்பதை அந்த புத்தகத்தின் முன் பக்கத்தில் இருந்த கையெழுத்து மூலம் கண்டுபிடித்தார்.

அதைப்பற்றி பத்திரிகையாளர்கள் ஜோ-விடம் கேட்டபோது இப்படி ஒரு ஆச்சர்யம் காத்திருக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இதில் என்னுடைய மற்றும் என் சகோதரியின் பல நினைவுகள் உள்ளது எனக்கூறி, 50 பவுண்டுகள் கொடுத்து அந்த புத்தகத்தை மீண்டும் வாங்கிவிட்டார். 50 பவுண்டுகள் என்பது இந்திய மதிப்பில் சுமார் 4500 ரூபாய் இருக்கும்.
தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது
Read More

Wednesday 2 October 2019

எதிர்காலத்தில் மனிதர்களை ஆளும் 5 புதிய தொழில்நுட்பங்கள் | 5 most Amazing Future Technologies

October 02, 2019 0

எதிர்கால தொழில் நுட்பமானது தற்போது உள்ள தொழில் நுட்பத்தை விட மிகவும் அதிக திறன் வாய்ந்ததாகவும் மனிதர்களின் வேலைகளை மிக எளிமையாக்கும் வகையிலும் இருக்கும். 

அதே நேரத்தில் சில எதிர் விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம். எது எப்படி இருந்தாலும் தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வேலையை எளிமையாகவும் அவர்களுடைய வாழ்வை மேம்படுத்தவும் தான் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் எதிர்காலத்தில் வரவிருக்கும் சில தொழில் நுட்பங்களைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்.

5. செயற்க்கை நுன்னறிவு (Artificial Intelligence)

இதனை மெஷின் இன்டலிஜென்ஸ் எனவும் அழைப்பார்கள். சாதாரண மனிதர்களுக்கு இருக்கக் கூடிய இயற்கையான அறிவுத் திறன் போலவே செயற்கையாக இயந்திரங்களுக்கு அறிவுத்திறன் வழங்குவதே இந்த தொழில்நுட்பம். இதன் மூலம் இடத்திற்கு தகுந்தார் போல செயல்படக்கூடிய வகையில் பல நவீன கருவிகளை உருவாக்க முடியும். உதாரணமாக ஒரு கணினியில் ஆயிரக்கணக்கான மருத்துவ குறிப்புகளை சேமித்து வைக்கலாம். நாம் கேட்கும் போது அந்த தகவலையும் கணினியால் கொடுக்க முடியும்.

ஆனால் எதற்காக கேட்கிறார்கள் என்பது சாதாரண கணினிக்கு தெரியாது. செயற்க்கை நுன்னறிவு திறன் கொண்ட கணினியை அணுகும் போது அதற்கான விடையும் கிடைக்கும். இதன் மூலம் மனிதர்களுக்கு ஆபத்தான வேலைகளான ராணுவம்,விண்வெளி ஆராய்ச்சி போன்ற பலவற்றை கருவிகள் மூலம் மனிதர்கள் போலவே சிறப்பாக செய்ய முடியும். இதன் முதற்கட்டமாக அமெரிக்காவில் மனிதன் போல பகுத்தறிவுடன் உருவாக்கப்பட்ட ஷோபியா என்ற ரோபோட் ஆனது 2015-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் குடியுரிமை வாங்கியுள்ளது. இதனிடம் பத்திரிகையாளர்களில் ஒருவர் நீ மனித இனத்தை அழித்து விடுவாயா என கேட்டபோது அதுவும் சிரித்துக்கொண்டே அழித்து விடுவேன் எனக் கூறியுள்ளது.

இப்போது கூட அமேசான் அலெக்சா  கூகுள் ஹோம் போன்ற சில செயற்க்கை நுன்னறிவு திறன் கொண்ட சாதனங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இதனால் எதிர்காலத்தில் பல செயற்க்கை நுன்னறிவு ரோபோக்கள் மற்றும் கருவிகள் உருவாக்கப்படலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

4. தானியங்கி வாகனங்கள் (Automatic Vehicles)

ஓட்டுனரின் உதவி இன்றி தானாகவே இயங்கும் தானியங்கி வாகனங்களை உருவாக்குவதில் தற்போது பல முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் அனைத்து நிறுவனங்களுமே ஆரம்ப நிலையில்தான் உள்ளனர். கார் நிறுவனங்கள் மட்டுமின்றி இணைய ஜாம்பவானான கூகுள்-ம் இந்த களத்தில் இறங்கி உள்ளது. மற்ற அனைத்து நிறுவனங்களையும் விட ஜெனரல் மோட்டார்ஸ் என்ற நிறுவனமே இந்த துறையில் முன்னிலை வகித்து வருகிறது. இவர்களது கார்களில் ரேடார், ஜிபிஎஸ், கம்ப்யூட்டர் விஷன் மற்றும் பல நவீன சென்சார்களை பொருத்தியுள்ளார்கள்.

இந்த சென்சார்கள் காரின் முன், பின், இடது, வலது என அனைத்து பக்கங்களிலும் ஏதேனும் தடுப்புகள் உள்ளனவா என்பதை ஒவ்வொரு மைக்ரோ வினாடியும் கண்கானித்து, அந்த தகவல்களை கணினிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். ஜிபிஎஸ் உதவி மூலம் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை சரியாக அறிந்து இதனால் தானாகவே செல்ல முடியும். மேலும் இந்த தொழில்நுட்பத்தில் கூகுள் அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறது.

3. நவீன வீடு (Smart home)

இந்த தொழில்நுட்பம் மூலம் நம் வீட்டிலிருக்கும் எந்த ஒரு வீட்டு உபயோக பொருட்களையும் ஒரே இடத்தில் இருந்தபடி இயக்க முடியும். தற்போது இது தொடக்க நிலையில் உள்ளது என்பதால் அமேசன் அலெக்சா, கூகுள் ஸ்மார்ட் ஹோம் போன்ற கருவிகளை பயன்படுத்தி ஸ்மார்ட் டிவி மின் விளக்கு போன்ற சில கருவிகளை மட்டும் இயக்க முடிகிறது.

ஆனால் இனிவரும் காலத்தில் வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் என வீட்டில் உள்ள ஒவ்வொரு சாதனத்தையும் மற்ற கருவிகளையும் சுலபமாக இயக்கும்படி செய்வதற்கான கருவிகள் தயாரிக்கப்படும்.

2. கம்பியில்லா மின்சாரம் (Wireless electricity)

ஒருகாலத்தில் மின்சாதன பொருட்களை இயக்க பெரிய பெரிய வயர்கள் பயன்பாட்டில் இருந்தன. அதன் பிறகு அதுவே சிறிய அளவிலும் பின்பு ரேடியோ வேவ்ஸ், இன்பிராரெட், ஃப்ளூடூத், வைஃபை என வயர் இல்லாமல் தகவல்களை மட்டும் அனுப்பி கொள்ளும்படியாக தொழில்நுட்பம் வளர்ந்து இப்போது மிகச் சிறிய இடைவெளியில் எந்தவித இணைப்பும் இன்றி மின்சக்தியை அனுப்ப முடிகிறது. இது எப்படி செயல்படுகிறது என்றால் மின்சாரமானது முதலில் மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு அனுப்பப்படுகிறது.

பிறகு அதற்க்கான கருவி மூலம் மின்காந்த அலைகள் மீண்டும் மின்சாரமாக மாற்றப்படுகிறது. தற்போது உள்ள வசதிகளின் மூலம் மிகக் குறைந்த இடைவெளியில் மிகக் குறைந்த அளவு மின்சக்தியை மட்டுமே இப்படி அனுப்ப முடிகிறது. மேலும் இந்த முறையில் மின் இழப்பு இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் இந்த குறைகள் சரிசெய்யப்பட்டு சிறப்பான ஒரு கம்பியில்லா மின்சாரம் சார்ந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும்.


1. பொருட்களின் இணையம் (IOT)

ஒரு காலத்தில் கணினியில் மட்டும் பயன்படுத்த முடிந்த இணைய வசதியை கடந்த சில ஆண்டுகளாக கைப்பேசியில் பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது இணையதளத்தை  கண்கானிப்பு கேமரா, நவீன கால டீவி, கார் என பல கருவிகளிலும் பல வகைகளில் பல வசதிகளுக்காக பயன்படுத்துகிறோம். அதுபோல அனைத்து மின்னணு பொருட்களையும் இணையத்தோடு இணைப்பதன் வாயிலாக உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு சுலபமாக அவற்றை இயக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பம் தான் ஐஓடீ.

அதாவது இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ். ஐஓடீ முறையைப் பயன்படுத்தி ஸ்மார்ட் ஹோம், உற்பத்தித்துறை, விவசாயத் துறை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, கட்டுமான துறை என அனைத்துத் துறைகளுக்குமான கருவிகளை தயாரிக்கும் ஆராய்ச்சிகள் உலகின் பல இடங்களில் தற்போது நடந்து வருகின்றன. எனவே கூடிய விரைவில் இது பயன்பாட்டுக்கு வரலாம்.

Read More